என்னுடைய பராமரிப்பிற்கு வரும் மெல்லக் கற்கும் இயல்புடைய (slow learner) ஒரு குழந்தைக்கு விளையாட்டு மூலம் கல்வியூட்டுவத்தற்க்காக ஒரு ஆசிரியை (A teacher for early education intervention) என் வீட்டிற்க்கு வாரம் ஒரு முறை வருவார். அவர் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரரி.
அவர் எப்போதுமுமே எம் இனத்தின் பழக்கவழக்கங்களைத் தரம் தாழ்த்திப் பேசுவார். அது எனக்கு மிகுந்த மனவருத்ததைத் தரும். மன வருத்ததைத் தந்தாலும் அவரின் கருத்துக்களில் உண்மை இல்லாமல் இல்லை. அவரின் கருத்துக்கள் பலதடவைகள் என்னைச் சிந்த்திக்க வைத்துள்ளன.
சமீபத்தில் அவர் கூறிய கருத்து ஒன்று என்னை உடனே சிரிக்க வைத்தாலும் சிந்த்திக்கவும் தூண்டியது. ”உங்கள் ஆசியாக்காரருக்கு சரியான முறையில் சாப்பிடத்தெரிவதில்லை. எல்லோரும் ஒன்றாக ஒரே இடத்தில் இருந்து சாப்பிடுவதில்லை. சாப்பாட்டை தட்டுடன் எடுத்து வந்து ஆளுக்கொரு இடத்தில் இருந்து சாப்பிடுகிறீர்கள். முக்கியமாக் TV கு முன்பாக இருந்து TV பார்த்துப் பார்த்துச் சாப்பிடுகிறீர்கள். அது தவறு இல்லையா. எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரு சாப்பாட்டு மேசை அருகே இருந்து சாப்பிடுவது தானே சரியான முறை. அப்படிச் சாப்பிடும் போதுதானே குடும்ப உறுப்பினருக்கிடையே நல்ல தொடர்புகள் ஏற்ப்படும். அது தவிர சிறு பிள்ளைகளிர்க்கு முன்மாதிரிகையான சாப்பாட்டுப்பழக்கங்களைக் காட்ட முடியும்.” எனக் கூறினார்.
அவர் கூறியத்து ஒன்றும் தவறு இல்லையே. சரியாகத்தான் கூரியிருக்கிறார். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. தாயகத்தில் இருந்தவரையில் எமக்கு இந்த சேர்ந்து ஒரே இடத்தில் இருந்து உணவு உண்ணும் அழகிய பழக்கம் இருந்தது. அவசரம் நிறைந்த இந்தப் புலம் பெயர் வாழ்க்கையில் தான் நாம் இந்தப் பழக்கத்தைக் கைவிட்டு விடோம்.
சேர்ந்து உணவு உண்பதில் ஆயிரம் நன்மைகள் கொட்டிக் கிடக்க நாம் ஏன் அதைக் கைவிட வேண்டும்.
No comments:
Post a Comment